முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் உதவியாளர் கெளசிகபூபதி குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக பொதுக்குழுவில் உறுப்பினராக உள்ள கெளசிகபூபதி மீது நிலமோசடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இவரை குண்டர் சட்டத்தின்கீழ் சேலம் மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர்.