விஸ்வரூபத்தை காப்பது தமிழக அரசின் கடமை
-புதிய அலைகள்
, திங்கள், 28 ஜனவரி 2013 (16:22 IST)
தணிக்கை செய்யப்பட்ட விஸ்வரூபம் படத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று உதவி இயக்குநர்கள் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழ் சினிமாவில் பணியாற்றும் 'புதிய அலைகள்' என்ற அமைப்பை சேர்ந்த உதவி இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,''
திரைப்படம் என்பது ஒரு கலைப் படைப்பு. அதற்கு தடை கோருவது என்பது படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது. இது மக்களாட்சி நடைபெறுகிற நாடு. மத ஆட்சி நடைபெறும் நாடு அல்ல. ஒரு திரைப்படம் சம் சமூகத்துக்கு பொருத்தமானதுதானா என்று ஆராய தணிக்கைக் குழு இருக்கிறது. அதன்மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்துக்கு பிரச்னை வரும்போது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இல்லை எனில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்னும் நிலை உருவாகிவிடும்.ஒரு திரைப்படத்தின் மீது கருத்தியல் ரீதியில் முரண்படுபவர்கள் தணிக்கைத்துறையின் மீது வழக்கு தொடுக்கலாம். தணிக்கை சட்டத்தை மாற்றக்கோரி போராடலாம். அதற்கு எதிராக எழுதலாம், புறக்கணிக்கலாம். ஆனால் திரையரங்கில் காட்சி நடைபெறுவதை தடுப்போம் என்று போராடுவது எந்த வகையில் சரி. அப்படி சட்டத்தை மீறி செயல்படுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்." இவ்வாறு புதிய அலைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.