விருதுநகர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தை சேர்ந்த சுதாகரன் (65), தனது மனைவி பத்மகுமாரி (60), மகன் ஜெனத்குமார் ஆகியோருடன் கும்பகோணத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் சென்ற காரை ஆறுமுகம் (65) என்பவர் ஓட்டி சென்றார். இந்த காரில் சரவணன் என்பவரும் பயணம் செய்தார்.
இந்த இரண்டு கார்களும் இன்று காலை 8 மணி அளவில் விருதுநகர்- சாத்தூர் சாலையில் உள்ள மருளூத்து என்ற இடத்தில் வந்தபோது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி யது. இதில் பத்மகுமாரி, சரவணன், ஆறுமுகம் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
படுகாயம் அடைந்த சுதாகரன், ஜெனத்குமார் ஆகியோர் விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.