கோவை சிறையில் இருக்கும் மார்டின் மீது விமானத்தில் லாட்டரி கடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லிய ிலிருந்த ு கோவைக்கு விமானம் மூலம் ஒரு கண்டெனரில் ரூ.30 லட்சம் மதிப்புள் ள லாட்டரி சீட்டுகள் கடத்தப்படுவதா க கடந்த மாதம் 13ம் தேதி கோவை பீளமேடு காவல் நிலைய ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான தனிப்படையினர் விமான நிலையத்திற்கு சென்று குறிப்பிடப்பட்ட கண்டெய்னரை சோதனை செய்தனர். அதில் 30 லட்சம் மதிப்புள் ள லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆனந்த ் என்பவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு ஆனந்தை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆனந்தை பீளமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார ் கைது செய்தனர். அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.