Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதியை மீறி புதிய பாட வகுப்புகளுக்கு அனுமதி : கோவை அண்ணா பல்கலைக்கழக‌த்து‌க்கு தா‌க்‌கீது

Webdunia
புதன், 3 ஜூன் 2009 (11:06 IST)
விதிமுறைகளை மீறி பல பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளில், புதிய பாட வகுப்புகளை நடத்த அனுமதித்ததாக தொடர‌‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் ப‌தி‌ல ் அ‌ளி‌‌க்கு‌ம்பட ி கோவை அண்ணா பல்கலைக்கழ க‌ த்து‌க்க ு‌ம், த‌மிழக அரசு‌க்கு‌ம் தா‌க்‌கீத ு அனு‌ப்‌ ப சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌‌ம் உ‌த்தர‌வி‌ட்‌டுள்ளத ு.

சென்னையை சேர்ந்த இந்திய மக்கள் மன்றத் தலைவர் வராகி பொதுநலன் கருதி சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ல ் தாக்கல் செய்து‌ள்ள மனுவில ், கோவை அண்ணா பல்கலைக்கழகம் பல பொ‌றி‌யி‌யல ் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தருவதில் விதிமுறைகளை மீறி நடந்து வருகிறத ு.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறைகளை மீறி பல பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளுக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.எஸ். வகுப்புகளை நடத்த அனுமதி தந்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்தது விதிமுறைகளை மீறிய செயலாகும்.

மேலும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 3 ஆண்டு பி.டெக். வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் வழிமுறை இல்லை. ஆனால் இதையும் மீறி பல பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.டெக். நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கி வருகிறார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாமல், கோவை அண்ணா பல்கலைக்கழகம் ஆன்-லைன் மூலம் பட்டப்படிப்பை தொடங்கியுள்ளது. இதற்கும் அங்கீகாரம் கிடையாது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.

ஆகவே, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை நிபுணர் குழுவை நியமித்து இந்த முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை மீதி தொடங்கப்பட்ட வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும் எ‌ன்ற ு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.எஸ்.ராமநாதன், என்.கிருபாகரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அ‌ப்போத ு, இதுபற்றி பதில் தருமாறு த‌மிழக அரசு‌க்கு‌ம், கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்க ு‌ம் தா‌க்‌‌கீத ு அனுப்ப உ‌த்தர‌வி‌ட் ட நீதிபதிக‌ள ், வழ‌க்க ு ‌ விசாரணைய ை ஜூ‌ன ் 15 ஆ‌ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments