இலங்க ை த ் தமிழர்களுக்கா க புதிதா க விடுதல ை சிறுத்தைகள் கட்சி தொடங்கியுள் ள ' நாம் தமிழர்' என்ற புதிய அமைப்ப ு சார்பில ் நடை பயணம் இன்ற ு தொடங்கியுள்ளனர ்.
சென்னையில் அடையாறு வேளச்சேரி, சைதாபேட்டை, தியாகராயநகர், கே.கே.நகர், மயிலாப்பூர், புளியந்தோப்பு ஆகிய 7 இடங்களில் இன்று காலை நடைபயணம் தொடங்கியது.
கே.கே.நகர், வேளச்சேரி, அடையாறு ஆகிய இடங்களில் நடந்த நடைபயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். தியாகராய நகரில் சோழநம்பியாரும், சைதாப் பேட்டையில் தமிழ்சுடர் ஒளியும், மயிலாப்பூரில் எழில் கரோலினும் துவக்கி வைத்தனர்.
புளியந்தோப்பில் பாவலன், திலீபன், கவுதம், மாவட்ட செயலர் வீரமுத்து, வன்னி அரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் சென்றனர். அப்போத ு இலங்க ை க ் தமிழர்களை காக்க கோரி கோஷம் எழுப்பினார்கள்.