சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், திருப்பூர், அன்னூர், கோயமுத்தூர், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாழை தார் கொள்முதல் செய்ய வந்திருந்தனர். சங்கத்தில் நடந்த ஏல விற்பனையில் கதளி ஒரு கிலோ ரூ. 48.10, நேந்திரம் கிலோ ஒன்று ரூ. 49 க்கும் விற்பனையானது.
செவ்வாழை ஒரு தார் ரூ. 760 க்கும், தேன் வாழை ஒரு தார் ரூ. 810 க்கும், பூவன் வாழை தார் ஒன்று ரூ. 560 க்கும், மொந்தன் தார் ஒன்று ரூ. 540 க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் சற்று விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.