மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது :
மதுரையில் மொத்தம் 3 இடங்களில் 10 தொகுதிகளின் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன; இதில் மருத்துவக் கல்லூரியில் 7 தொகுதிகளின் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன; இவைகளுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது;
பாதுகாப்பு பணியில் மத்திய, மாநில, மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள், அந்தந்தத் தொகுதி தேர்தல் அதிகாரிகள், ஏஜண்டுகள் ஆகியோரும் ஓட்டுப் பெட்டிகளை கண்காணித்து வருகின்றனர்;
ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் வெப்கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.