Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை! மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2012 (15:19 IST)
வங்க கடலில் ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது மேலும் வலுவடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஆந்திராவிலும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியை ஒட்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்யும் அறிகுறியுடன் காணப்பட்டது.

பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருப்பதால் தமிழ்நாட்டில் கடந்த 2 மாதமாக நீடித்து வந்த வெப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று வெயில் அளவு 100 டிகிரியாக குறைந்தது. இதற்கிடையே தமிழ்நாட் டின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments