தென்வங்க கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று தென்மேற்கு வங்க கடலில் நோக்கி நகர்கிறது.
எனவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். ஆனால் இந்த மழை உடனடியாக வருவதற்கு வாய்ப்பு இல்லை. என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனை சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் இன்று தெரிவித்தார்.
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்தங்கள் காரணமாக சென்னை நகரில் நல்ல மழை பெய்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கணிசமான மழை பொழிவை சென்னை பெற்றது.