உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ராணா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதாரண வார்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை இன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.