ரூ.1 கோடி கேட்டு கடத்தல் நாடகமாடிய மாணவன் (படங்கள்)
, வியாழன், 1 மார்ச் 2012 (13:25 IST)
காவல்துறை உதவி ஆணையர் சங்கருடன், கடத்தல் நாடமாடிய மாணவன் யுவராஜ்.தந்தையிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற மாணவனின் கடத்தல் நாடகம் சென்னையில் அரங்கேறியுள்ளது. கடத்தல் நாடகத்துக்கு உதவிய நண்பர்கள் 4 பேர் காவல்துறையினரிடம் சிக்கினர்.சென்னை மகாகவி பாரதிநகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் யுவராஜ் (15). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் யுவராஜ், பள்ளி முடிந்ததும் டியூசனுக்கு சென்றார்.டியூசன் முடிந்து மாலை 7 மணிக்கு திரும்பி விடும் யுவராஜ் இரவு 10 மணியாகியும் வராததால் அவருடைய தந்தை கிருஷ்ணன், டியூசன் சென்டரில் விசாரித்தார்.7
மணிக்கே யுவராஜ் சென்று விட்டதாக டியூஷன் சென்டரில் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ், நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் யுவராஜை கண்டு பிடிக்கமுடிவில்லை.இந்த நிலையில் கிருஷ்ணனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசிய நபர், 'உங்கள் மகனை நாங்கள் கடத்தியிருக்கிறோம். உங்களுக்கு உங்கள் மகன் வேண்டும் என்றால் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டி போனை வைத்து விட்டான்.
கடத்தல் நாடகமாடி சிக்கி கொண்டவர்கள்.இது குறித்து உடனடியாக மகாகவி பாரதிநகர் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணா புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, கிருஷ்ணனுக்கு வந்த செல்போன் அழைப்பு கொருக்குப்பேட்டையில் இருந்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து, கொருக்குப்பேட்டைக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த மாணவன் யுவராஜ், அவரது நண்பர்கள் அஸ்ஸாம்கான், அன்பவர்கான், விஜயகுமார் ஆகியோரை பிடித்தனர்.கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அனைவரும் யுவராஜ் நண்பர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் 5 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.இதில் கைதான சகோதரர்கள் அஸ்ஸாம்கான், அன்பவர்கான் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவரான விஜயகுமார் சென்னையை சேர்ந்தவர். விஜயகுமார் வேல்ஸ் பொறியியல் கல்லூரியில் படித்தவர்.உத்தரபிரதேசத்தை சேர்ந்த சகோதர்களில் ஒருவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். அவர்களின் தந்தை அகமதுகான் தேர்தல் விரோதத்தில் உத்தரபிரதேசத்தில் 5 கொலை செய்தவர்.மகன்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் துப்பாக்கி கொடுத்து சென்னை அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.