சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மே இறுதியில் நடைபெறும் விழாவில், பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அல் காய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கொன்றது அத்துமீறிய செயல் என்றார்.
இச்செயல் அமெரிக்காவின் அரசப் பயங்கரவாதம் என்றும், இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிடும் அமெரிக்காவின் இத்தகையப் போக்கை கண்டிப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.