திருநெல்வேலி மாவட்டம் ராஜபாளையம் அருகே எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தேவாலயத்தை நேற்றிரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
மத போதகர் ஜான் ஆசீர்வாதத்தை கொல்ல நடந்த முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தேவாலயத்தில் மத போதகர் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேவாலயம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது வெளியே ஓடிவந்த மத போதகர் உதவிக் கேட்டு சப்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் விரைந்து வந்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து ராஜபாளையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தகம், இசை உபகரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் தேவாவலத்தின் மேல் கூரை எரிந்து சாம்பலானது.