கோவை : இராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட வழக்கில், கைதியாகி சிறையில் உள்ள ம.தி.மு.க பிரமுகர் சந்திரசேகரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே 2ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து பயிற்சி முடிந்து கோவை மதுக்கரை இராணுவ முகாமுக்கு இராணுவ வீரர்கள் வாகனங்களில் வந்தனர். அப்போது, பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க உட்பட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள், இராணுவ வாகனங்களை தாக்கினர்.
இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் உட்பட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ராமகிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, கோவை பீளமேட்டை சேர்ந்த ம.தி.மு.க பிரமுகர் சந்திரசேகரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பழனிக்குமார் உத்தரவிட்டார். உத்தரவு நகலை சிறையில் உள்ள சந்திரசேகரனிடம் சூலூர் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் நேற்று மாலை வழங்கினார்.