வேலூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அப்போது சீறி வந்த காளை ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் வினோத்குமாரை முட்டியது.
இதில் பலத்த காயம் அடைந்த வினோத்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டி குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.