மே மாத இறுதியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 6,541 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர். மாணவிகள் 4 லட்சத்து 25 ஆயிரத்து 838 பேர். இவர்கள் தவிர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழ் வழியில் மட்டும் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 பேர் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் 19 ஆயிரத்து 697 மாணவிகள் உள்பட 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் 15 ஆயிரத்து 333 பேர் தேர்வு எழுதினர்.
இதனிடையே மே மாத இறுதியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் இன்று தெரிவித்துள்ளார்.