மோசமான வானிலை காரணமாக போர்ட் பிளேர் சென்ற விமானம் சென்னை திரும்பியது.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 4.50 மணிக்கு 162 பயணிகளுடன் அந்தமானின் போர்ட் பிளேருக்கு கிங் பிஸ்சர் விமானம் புறப்பட்டு சென்றது.
போர்ட் பிளேர் அருகே சென்ற போது இடி மின்னலுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் தரை இறங்க முடியவில்லை.
இதையடுத்து 6.35 மணிக்கு விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. அந்தமானில் மோசமான வானிலை தொடர்ந்து நிலவியதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.