Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை விபத்து எதிரொலி: தமிழகத்திற்கு வரும் ரயில்கள் ரத்து

மும்பை விபத்து எதிரொலி: தமிழகத்திற்கு வரும் ரயில்கள் ரத்து
சென்னை , சனி, 24 அக்டோபர் 2009 (12:04 IST)
மும்பை அருகே ரயில் தண்டவாளத்தின் மீது மேம்பாலம் இடிந்து விழுந்ததால், மும்பை வழியாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பையின் தானே பகுதியில் ரயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மும்பையில் இருந்து நேற்று கன்னியாகுமரி புறப்பட வேண்டிய ரயில், 26ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மும்பை புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் மும்பை தாதரில் இருந்து நேற்று புறப்பட வேண்டிய தாதர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து இன்று சேலம் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ், சேலத்தில் இருந்து நாளை சென்னை எழும்பூர் புறப்பட வேண்டிய சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து 26ஆம் தேதி தாதர் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil