முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கு வரும் மே 27-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 895 முதுநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 16 ஆம் தேதி முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்படும் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் மார்ச் முப்பது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள முப்பத்து இரண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மற்றுத்திறனாளிகள் 250 ரூபாய் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நேரில் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.