Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருடன் எம்.கே.நாராயணன் இன்று மீண்டும் சந்திப்பு

Webdunia
ஞாயிறு, 24 மே 2009 (15:43 IST)
இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், முதல்வர் கருணாநிதி இருவரும் இன்று காலை 2வது முறையாக பேச்சு நடத்தியுள்ளனர்.

இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில ், பிரதமரின் தூதுவர்களாக எம்.கே.நாராயணனும ், அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனனும் சிறிலங்காவுக்குச் சென்று அதிபர் ராஜபக்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தியபின் நாராயணனும ், மேனனும் டெல்லி திரும்பியதுடன் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருடன் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், நேற்றிரவு சென்னை வந்த எம்.மே.நாராயணன், முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று 15 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். இதன்பின ், அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.

இலங்கையில் தலைவர்களுடன் பேசியது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் அவர் விளக்கிய நிலையில், இன்று காலை இருவரும் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி தி.மு.க. கட்சித் தலைவர்களுடன் நடத்தப்படும் விவாதத்திற்கு இடையே, நாராயணன்-முதல்வர் இடையிலான சந்திப்பு 2வது முறையாக நிகழ்ந்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments