தமிழ்நாட்டிலேயே முதலமைச்சர்ன்னு தோற்ற வரலாறு ஜெயலலிதா உண்டு என்று எதிர்க்கட்சி தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கூறினார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் தனியா ஜெயிச்சோம் உள்ளாட்சியில் என்றார்கள். ஊர் கூடிதான் தேர் இழுக்கனும். ஊர் கூடிதான் தேர் இழுத்தார்கள்.
ஊர் கூடாமல் தனியா தேர் இழுத்தா, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் என்ன நடந்திருக்கும் என்பது தெரிந்திருக்கும். அது தெரியாம இன்று உள்ளாட்சியில் நாங்கள் ஜெயிச்சோம் ஜெயிச்சோம் என்கிறார்கள்.
போன இடைத்தேர்தல்களில் ஒரு தேர்தல்களில் கூட இவர்கள் ஜெயிக்கல. டெபாசிட் போன பென்னாகரத்தை மறந்திட்டாங்க. அதாவது தமிழ்நாட்டிலேயே முதலமைச்சர்ன்னு தோற்ற வரலாறு ஜெயலலிதா உண்டு. ஏன்னா அவர் பர்கூரில் தோற்றாங்க. இதைவிட வேற என்ன வேணும்.
சட்டசபையில் எங்களுடைய கருத்தை கேட்க வேண்டும். கருத்தை சொல்ல விடாமல் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற ஒரு அந்தஸ்தை கொடுத்துவிட்டு, பேசக் கூடாது பேசக் கூடாதுன்னா என்ன சொல்றது. முதல் அமைச்சருக்கு அடுத்தப்படியா எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்றாங்க.
எல்லா மந்திரியும் பேசும்போது நா உட்கார்றேன். ஆனால் என்னையும் நீங்கள் பேச அனுமதிக்க வேண்டும். எவரோ ஒருத்தர் கையை நீட்டி பேசுறார். கை நீட்டி பேசுறார் என்று கேட்டால் அது தப்பு என்கிறார்கள். என்ன பிரச்சனையானாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். கையை நீட்டி பேசினால் எங்க ஆளுங்களும் சும்மா இருக்க மாட்டாங்க என்றார் விஜயகாந்த்.