சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையம் ஊராட்சியில் மின் நிலையம் அமைக்கக் கோரி அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்திரகவுண்டன் பாளையம் ஊராட்சியில் 110 கே.வி. துணை மின் நிலையத் திட்டத்தை கிடப்பில்போட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்,
ந்தத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக்கழகத்தின் சார்பில், வருகின்ற 3ஆம் தேதி காலை 10 மணி அளவில் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலர் செ. செம்மலை தலைமையிலும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலர் எஸ்.கே. செல்வம் மற்றும் சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.