கடம்பூர் சாலைய ிலுள்ள மல்லியம்மன் க ோய ிலில் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோபிசெட்டிபாளையம் தாலுக்கா டி.ஜி.ப ுத ூரை அடுத்துள்ளது கே.என்.பாளையம். இங்கிருந்து கடம்பூர் மலைக்கு செல்லும் சாலையில் உள்ளது மல்லியம்மன் க ோய ில். இது இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற க ோய ிலாகும். இந்த க ோய ிலில் முக்கிய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
மேலும் இந்த வழியாக செல்லும் பயணிகள் இந்த மல்லியம்மனை வணங்கிவிட்டு பிறகுதான் தங்கள் பயணத்தை தொடர்வார்கள். இந்த க ோய ிலுக்கு காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள்.
கே.என்.பாளையம், காளியூர், பெரும்பள்ளம் அணை, அங்கணகவுண்டன்ப ுத ூர், கடம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த க ோய ிலில் குவிந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் பல்வேறு நேர்த்திகடன்களை அம்மனுக்கு செலுத்தினர்.