மலேசியாவில் இருந்து சென்னை வந்த இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தண்டடையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலப்பூரில் இருந்து இன்று சென்னை வந்த பாரதி (28), மாதவன் கருப்பையா (29) ஆகியோருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக சென்னையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பாரதி என்பவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். ஒரு வருட டூரிஸ் விசாவில் சென்ற இவர், விசா காலம் முடிந்து சட்ட விரோதமாக அங்கு தங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் 35 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் தமிழகம் வந்துள்ளார்.