இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது:- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அதிமுக சார்பில் அணிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். மேலும் அகில இந்திய பார்வடு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தார் மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடுபட்டார்.