Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும்: பசும்ப்பொன்னில் ஜெயலலிதா பேச்சு

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (16:10 IST)
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திரு உருவச் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார்.
FILE

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது:- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அதிமுக சார்பில் அணிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். மேலும் அகில இந்திய பார்வடு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தார் மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடுபட்டார்.

வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம் என்று குறிப்பிட்டவர் தேவர் திருமகன். அவரது பொன்மொழிகள் இக்காலத்துக்கும் பொருநத்தமாக உள்ளன.

ஆன்மீகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை அவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளைத்தான் அதிமுகவும் பின்பற்றி வருகிறது. பொதுமக்களாகிய உங்களுடைய ஆதரவுடன் பசும்பொன் முத்துராங்கலிங்க தேவரின் கொள்கைகளை வென்று எடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய பொதுமக்களாகிய நீங்கள் என்றென்றும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.

முன்னதாக பசும்பொன் வந்து சேர்ந்த ஜெயலலிதா. முத்துராமலிங்க தேவரின் நினைவு இடத்துக்கு சென்று கோவை காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் சுவாமிகளிடம் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஒப்படைத்தார். அவர் தங்க கவசத்தை முத்துராமிலங்க திரு உருவ சிலைக்கு அணிவித்து தீபாராதனை காட்டி முதல்வருக்கு பிரசாதம் வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments