மதுரை சட்டக் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தக்கூடாது, சட்டக் கல்லூரிகளை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 10 நாட்களாக மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த ஐந்து தினங்களுக்கு கல்லூரியை காலவரையின்றி மூடுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
இது தொடர்பாக, கல்லூரி முதல்வருடன் மாணவர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, கல்லூரி முதல்வரை, அவரது அறைக்குள் வைத்து மாணவர்கள் பூட்டினர்.
இதனையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களை மீட்டனர். இந்நிலையில், இன்று 10வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நீடித்த நிலையில், 30 மாணவர்களை காவல்துறையின்ர் கைது செய்துள்ளனர்.