Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசாஜ் கிளப்புகள் நடத்த தடை இல்லை: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2009 (13:55 IST)
சென்னையில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்துவதை காவ‌ல்துறை தடுக்க முடியாது என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பளித்துள்ளது.

இன்புளுவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நரேஷ்குமார் உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மன ு‌வி‌ல், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே `இன்புளுவன்ஸ் ஸ்பா' என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது. இப்படி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்வதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே, இதுபோன்ற மசாஜ் பார்லர் நடத்துவதற்கு சட்டப்பூர்வமாக தடை இல்லை. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து அமைதியாக நடத்துவதில் கா‌வ‌ல்துறை‌யின‌ர் தடையிட கூடாது என்று உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனுவுக்கு பதில் அ‌ளி‌‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் தா‌க்க‌ல் செ‌ய்த மனுவில ், மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் சட்டப்படி உரிமம் பெற வேண்டும். பொதுநலனை கருத்தில் கொண்டும், சமூக ஒழுக்கத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் மசாஜ் மையங்களுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்.

மனுதாரர் தனது மசாஜ் கிளப்பில் டீன்ஏஜ் பெண்களை வைத்து மசாஜ் செய்தால் அங்கு வரும் நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற மசாஜ் பார்லர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கே.சந்துரு அ‌ளி‌த்த தீர்ப ்‌பி‌ல், ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் ஹெல்த் கிளப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் எதுவும் இல்லை. சென்னை மாநகர காவ‌ல்துறை சட்டத்திலும், இதுபோன்ற மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதிலிருந்து மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுக்க காவ‌ல்துறை‌க்கு சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்பது தெளிவாகிறது. இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் மசாஜ் பார்லர் நடத்தலாம். அதே நேரத்தில் அந்த மசாஜ் மையங்களை ஆய்வு செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவ‌‌‌ல்துற ைக்கு எந்த தடையும் இல்லை எ‌ன்று ‌நீ‌திப‌தி தீர்ப் ப‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments