மகாத்மா காந்தியின் 143வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ரோசைய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் முதலமைச்சர் ஜெயலலிதா காந்தியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்களும் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு, உலக அமைதி வேண்டி சைக்கிள் பேரவை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.