பள்ளிக் கூடத்தில் வைத்து ஒரு மாணவன் செய்த தவறுக்கு என்னை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ஒரு தனியார் பள்ளி தலைமையாசிரியர் நியாயம் கற்பித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த மாணவன் மகேஷ் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான். அதே பள்ளியில் படிக்கும் மாணவன் கார்த்திக், பள்ளிக்கூடும் முடிந்த பின்னர் வீட்டிக்கு சென்றுள்ளனர்.
அப்போது, பள்ளி வளாகத்தில் மாணவன் கார்த்திக் தனது பேனாவை மேலே தூக்குப் போட்டுள்ளார். அப்போது மகேஷ் என்ற மாணவன் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவன் மகேஷ் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ் கூறுகையில், பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் அனைத்து மாணவர்களையும் வெளியில் அனுப்புவதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து கார்த்திக் என்ற மாணவன் தூக்கி வீசிய பேனா மகேஷ் என்ற மாணவன் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எதிர் பாராமல் நடந்த இந்த சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.
இந்த சம்பவம் நடந்தவுடன் போலீசார் என்னை அழைத்து மிரட்டி மாணவனின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக என்னிடம் எழுதி வாங்கினர். இதன் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவன் கார்த்திக் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளான். என்னிடம் இருந்து பணம் கறப்பதற்காக ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அவர்கள் போனில் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்.
'உங்களை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நீங்கள் பணியிலும் நீடிக்க முடியாது' என்று மிரட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
பள்ளிக் கூடத்தில் வைத்து ஒரு மாணவன் செய்த தவறுக்கு தலைமை ஆசிரியரான என்னை தண்டிப்பது எந்த விதத்தில் நியாமாகும். எனவே எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய உள்ளேன் என்று தலைமையாசிரியர் தர்மராஜ் கூறினார்.