Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வாங்க கடைசி நாள் மே 30

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வாங்க கடைசி நாள் மே 30
சென்னை , ஞாயிறு, 24 மே 2009 (15:21 IST)
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைக் பெற மே 30ஆம் தேதி கடைசி நாள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழக மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடித்து வினி யோகிக்கப்படுகிறது.

நேற்று வரை ஒரு லட்சத்து 53 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செயலாளர் ரைமண்ட் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாணவர்களுக்கு எளிதாகவும், தட்டுப்பாடு இல்லாமலும் விண்ணப்பங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும்.

கடைசி நேரம் வரை கூட விண்ணப்பம் இல்லை என்று கூறாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 31ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை வரை சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

இதற்காக 15 கவுண்ட்டர்கள் செயல்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் விண்ணப்பங்களை 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கிய ஒரு வாரத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று ரைமண்ட் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil