Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (07:54 IST)
அமைச்சர் சரோஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெற்றோரை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இன்றைய நவீன காலக் கட்டங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பெரும்பாடு பட்டு வளர்க்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு என கஷ்டப்பட்டு தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குகின்றனர். ஒரு சில பிள்ளைகளோ நல்ல நிலைக்கு வந்த பின்னர், பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். 
 
உலகில் நாம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரே ஜீவன் நமது பெற்றோர் தான், ஆனால் அவர்களையும் சில பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது வேதனைக்குரியது.
 
இதனால் பல பெற்றோர்கள் மனமுடைந்து முதியோர் இல்லங்களில் மீத வாழ்க்கையை நரக வேதனையுடன் கழிக்கின்றனர். 
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சரோஜா இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர்களை அன்போடும், பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு பிள்ளைகளின் தலையான கடமை.
 
அதை விட்டுவிட்டு பெற்றோர்களை சிரமப்படுத்தி அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments