Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களிடம் கொள்ளையடித்த பச்சையப்பன் மாணவர்கள் கைது

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2013 (11:17 IST)
FILE
சென்னையில் கடந்த சில மாதங்களாக பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட யூசூப் உட்பட 3 பெரும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரிட்டோ லாரன்ஸ், சையது அப்துல் காதர் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டபடிப்பு படித்து வரும் மாணவர்கள்.

அண்மையில் சென்னையில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து வந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பெண்ணிடம் செய்னை பறித்த குற்றத்திற்காக இவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையின் புகழ்பெற்ற கல்லலூரியில் பயின்றுவரும் மாணவர்கள் இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments