புதிய தலைமுறை செய்தியாளர் மரணம்
, திங்கள், 19 நவம்பர் 2012 (11:49 IST)
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த செய்தியாளர் நெடுஞ்செழியன் இன்று காலமானார். அவருக்கு வயது 27.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வர்த்தக பிரிவில் பணியாற்றி வந்தவர் நெடுஞ்செழியன். சக பத்திரிகையாளர்களிடம் நன்மதிப்பை பெற்று வந்தோடு, செய்திகளை மிகவும் துல்லியமாகவும், மக்கள் புரியும் அளவுக்கு மிகவும் அருமையாக செய்திகளை கூறுபவர் நெடுஞ்செழியன்.
சிறந்த செய்தியாளரான நெடுஞ்செழியன் இழப்பு பத்திரிகை துறைக்கு ஈடு செய்ய முடியாதது.பத்திரிகையாளர் நெஞ்செழியன் மறைவுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.