Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் கஞ்சா, செல்போன் தாராளம், அதிரடி ரெய்டு

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2013 (13:39 IST)
சென்னையில் உள்ள புழல் சிறையில் தண்டனை கைதிகளாக 640 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் விசாரணை கைதிகளாக 1500 பேரும், மகளிர் சிறையில் 160 பேரும் உள்ளனர்.

சட்ட விரோத பொருட்களை கைதிகள் பதுக்கி வைப்பதை தடுக்க போலீசார் 3 மாதத்துக்கு ஒரு முறை சிறையில் சோதனையிடுவது உண்டு.
அந்த வகையில் போலீசார் இன்று சிறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 500 போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

காலை 8 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. கைதிகளிடம் கஞ்சா, செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், அதனை தடுக்க இந்த சோதனை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கைதிகள் கஞ்சா, செல்போனை பதுக்கி வைத்து இருக்கிறார்களா? என்பதை அறிய ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் கழிவறை, மரத்தடி ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments