சென்னையில் உள்ள புழல் சிறையில் தண்டனை கைதிகளாக 640 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் விசாரணை கைதிகளாக 1500 பேரும், மகளிர் சிறையில் 160 பேரும் உள்ளனர்.
சட்ட விரோத பொருட்களை கைதிகள் பதுக்கி வைப்பதை தடுக்க போலீசார் 3 மாதத்துக்கு ஒரு முறை சிறையில் சோதனையிடுவது உண்டு.
அந்த வகையில் போலீசார் இன்று சிறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 500 போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
காலை 8 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. கைதிகளிடம் கஞ்சா, செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், அதனை தடுக்க இந்த சோதனை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைதிகள் கஞ்சா, செல்போனை பதுக்கி வைத்து இருக்கிறார்களா? என்பதை அறிய ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் கழிவறை, மரத்தடி ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.