புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவ- மாணவிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. இதே நேரத்தில் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வழக்கு மாறாக அங்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இது குறித்து மாநில முதல்வர் ரங்கசாமி கூறுகையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தன்னுடைய கைகளுக்கு வந்து சேரவில்லை கூறினார்.
இதனால் புதுச்சேரி பகுதியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 248 பேர் முடிவு தெரியாமல் பரிதவித்துள்ளனர்.