பி.எட ், எம்.எட் படிப்புக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 20 ஆ ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளிய ிட்டுள்ள செய்திக்குறிப்பில், பி.எட ், எம்.எட் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 20ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் வழங்கப்பட்ட தகுதி மற்றும் அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் www.tnteu.in என்ற இணைய தளத்தில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.