Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்2 தனித்தேர்வு முடிவு நாளை வெளி‌யீடு

Webdunia
புதன், 4 நவம்பர் 2009 (10:02 IST)
கடந்த செப்டம்பர ், அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட பிளஸ்2 தனித்தேர்வு முடிவு நாளை காலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

www.pallikalvi.in, www.dge1.tn.nic.in, www.dg2.tn.nic.in, www.dg3.tn.nic.in

மதிப்பெண் சான்றிதழ் மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் 9ஆ‌ம் தேதி பிற்பகல் முதல் 11ஆ‌ம் தேதி பிற்பகல் வரை வழங்கப்படும். சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பிவைக்கப்படும்.

மறுகூட்டல், ஜெராக்ஸ் பிரதி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் 11ஆ‌ம் தேதி முதல் 13ஆ‌ம் தேதி வரை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, விண்ணப்பம் பெற்ற அலுவலகத்தில் 13ஆ‌ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments