ஜூன், ஜூலையில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
( www.dge.tn.nic.in) என்ற இணையதளத்தில் பிற்பகலில் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் 10 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவுதபாலில் அனுப்பி வைக்கப்படும்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.