பாராளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார் என்று சென்னையில் இன்று நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
'' பாராளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவை இந்த இரண்டிற்கும் சேர்ந்த தி.மு.க. உறுப்பினர்களுக்கான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த இரண்டு குழுக்களுக்கும் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருக்கிறார்'' என ்றும் கூறினார்.