ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதிகளில் பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாய கிணறுகளில் நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் பொதுப்பணித்துறை மற்றும் மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு துண்டிப்பு செய்தல் இதைய எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டம் மற்றும் தீ குளிக்க முயற்சி போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் ஒன்றான சத்தியமங்கலம் அருகே <உள்ள வெள்ளியம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் பார்வையிட்டார். இவருடன் இக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஆறுமுகம், பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம், இந்திய கம்யூனிட்கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன், விவசாய பிரதநிதிகள் சின்னராஜ், ரத்தினசாமி உள்ளிட்டோரும் உடன்சென்றனர்.
பவானி ஆற்றின் ஓரம் உள்ள விவசாய கிணறுகளை பார்வையிட்ட பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:
இந்தியாவில் உணவு தட்டுப்பாட்டை நீக்க இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின்போது பெரிய அணைகள் கட்டப்பட்டது. உணவு உற்பத்தியை முதன்மையாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை மறந்து வேறுவிதமான நடவடிக்கை தற்போது எடுத்து வருகின்றனர். பவானி ஆற்று பகுதியில் தண்ணீர் ஓடும் பகுதி பள்ளமாகவும் விவசாய நிலம் உள்ள பகுதி மேட்டு பகுதியிலும் உள்ளதால் நிலத்தடி நீர் பிரச்சனை ஏற்படுவதால் விவசாயிகள் ஆற்றின் கரையோரத்தில் கிணறுவெட்டி விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கின்றனர்.