Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை மயக்கி கற்பழித்த ஆசிரியர் கைது

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (13:34 IST)
ராசிபுரம் அருகே உள்ள பள்ளியில் படித்த 9 ஆம் வகுப்பு மாணவியை மயக்கி கற்பழித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
FILE

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்பையாபுரம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9, 10-ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல் ஆசிரியராக அருண்குமார் (27) என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுப்பற்றி தலைமை ஆசிரியர் அனுஷியாவிடம் மாணவிகள் புகார் செய்தனர். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. அவர் ஆசிரியர் அருண்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களை தெரிவித்தார். இதையடுத்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் நாமக்கல் குழந்தைகள் நல குழுமத்தில் சம்பந்தப்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் அருண்குமார் மீது புகார் செய்தனர்.

இதைதொடர்ந்து குழுவின் தலைவர் சிவகாமவல்லி என்பவர் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை அனுஷியா மற்றும் தமிழ் ஆசிரியை ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவி வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் செய்தார். அதில் நாமக்கல் பொறியியல் கல்லூரியில் நடந்த கண்காட்சிக்கு தன்னை அழைத்து சென்று ஆசிரியர் அருண்குமார் அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.

இதையடுத்து ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அருண்குமாரை கைது செய்தார். பின்னர் அவரை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்த கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!