கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 22 செ.மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக சோழவரத்தில் 13 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கொள்ளிடத்தில் 10, சிதம்பரத்தில் 9, கடலூர், சேத்தியாதோப்பு, ஒரத்தநாடு, அம்பாசமுத்திரம் தலா 8, காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி, வேப்பாவூர் தலா 6 செ.மீட்டர் மழை செய்துள்ளது.
கும்பகோணம், கொடவாசல், நாகை, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம் தலா 5, செங்குன்றம், விருத்தாசலம், பண்ருட்டி, அதிராமபட்டிணம், பாபநாசம், வலங்கைமான், பாம்பன், பரமக்குடி, தொண்டி, மணிமுத்தாறு, பாளையங்கோட்டை, சத்தான்குளம், தூத்துக்குடி தலா 4 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.