Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து திருச்செந்தூருக்கு சிறப்பு இரயில் இயக்கம்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2009 (17:24 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்த ையெ ாட்டி ஜூலை 1, 2 தேதிகளில் நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது தொட‌ர்பாக தெற்கு இ ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப ்‌பி‌ல், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை 2ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

இத ையெ ாட்டி பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே ஜூலை 1, 2 தேதிகளில் சிறப்பு இரயில்களை இயக்க தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு இரயில், நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 11.15 மணிக்கு திருச்செந்தூர் போய்ச்சேரும். திருச்செந்தூரில் இருந்து சிறப்பு இரயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த சிறப்பு இரயில்கள் திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் பிரிவில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எ‌ன்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments