நெய்வேலி என்.எல்.சி.யில் துப்பாக்கி சூடு - ஒப்பந்த ஊழியர் பலி
, திங்கள், 17 மார்ச் 2014 (13:58 IST)
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் ஒருவர் சுட்டதில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்.எல்.சி. 2வது நுழைவாயிலில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது? இறந்தவர் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை சரியாக கிடைக்கவில்லை. இதற்கிடையே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கற்களை வீசி தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தாகவும் தெரிகிறது.