நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 33.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் பவானி ஆற்றில் வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.கடந்த ஆண்டு இதே நேரத்தில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.39 அடியாக இருந்தது.
கடந்த ஆண்டை விட 38 அடி குறைவாக உள்ளதால் அணையின் நீர்தேக்க பகுதி பார்ப்பதற்கு குட்டைபோல் காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கீழ்நோக்கி சென்றால் ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கீழ்நோக்கி செல்வதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.