Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மெட்ரிக்குலேஷன் தேர்வு; 25ஆ‌ம் தே‌தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2009 (09:36 IST)
10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு வரு‌ம் 25ஆ‌ம் தேதி தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் 50 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு வருகிற 25 ஆ‌ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8 ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம ், புதுச்சேரியில் 6,541 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர். மாணவிகள் 4 லட்சத்து 25 ஆயிரத்து 838 பேர் ஆவர். தனித்தேர்வர்களாக மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 29 ஆயிரத்து 209 மாணவர்களும், 29 ஆயிரத்து 916 மாணவிகளும் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழ் வழிக்கல்வியில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 ஆகும். 10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வை சென்னையில் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 82 பேர் மாணவர்கள். 19 ஆயிரத்து 697 பேர் மாணவிகள்.

புதுச்சேரியில் 7 ஆயிரத்து 522 மாணவர்களும், 7 ஆயிரத்து 811 மாணவிகளும் ஆக மொத்தம் 15 ஆயிரத்து 333 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த ஆண்டு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தமிழ ், ஆங்கில வழி வினாக்கள் ஒரே வினாத்தாளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன. முதலில் தமிழ்வழியிலும் அதைத்தொடர்ந்து, ஆங்கில வழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

10- ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன ், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் நாளை (18 ஆ‌ம் தே‌த ி) தொடங்கி ஏப்ரல் 8 ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட ு, புதுச்சேரியில் 3 ஆயிரத்து 128 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 787 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 64 ஆயிரத்து 734 பேர். மாணவிகள் 52 ஆயிரத்து 53 பேர். சென்னையில் 16 ஆயிரத்து 369 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 148 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 361 ஆகும். தேர்வு மையங்களில் மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. மாணவர்கள் கலந்து அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். மொத்தம் 2 ஆயிரத்து 788 மையங்களில் தேர்வு நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதைப் போல 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்யவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 10‌ ஆ‌ம் வகு‌ப்ப ு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகளை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதுவரை 10 ஆ‌ம் வகு‌ப்ப ு, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் ஆங்கில வழிக்கும், தமிழ் வழிக்கும் தனியே அச்சிடப்பட்டு வழங்கப்படும். இந்த ஆண்டு முதல்முறையாக ஒரே வினாத்தாளில் இரு மொழிகளின் வினாத்தாளும் ஒன்றன்பின் ஒன்றாக அச்சிட்டு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments