நாமக்கல் அருகே உள்ள எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் அருகே வளையப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தவிட்டு எண ்ணெய் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் இரவு தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே பல ியாயினர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த 9 தொழிலாளர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.
இந்த நிலையில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த உ மேஷ்குமார் என்ற தொழிலாளி நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இன்று காலையில் ஓம்பிரகாஷ் என ்ற வாலிபர் இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.