Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாமக்கல் தீ விபத்து : ப‌லி 15ஆக உயர்வு

நாமக்கல் தீ விபத்து : ப‌லி 15ஆக உயர்வு
நாமக்கல் , வெள்ளி, 8 மே 2009 (16:00 IST)
நாம‌க்க‌ல் அருகே உ‌ள்ள எ‌ண்ணெ‌ய் ஆலைய‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌தீ ‌விப‌த்‌தி‌ல் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 15 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

நாமக்கல் அருகே வளையப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தவிட்டு எண்ணெ‌ய் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் இரவு தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே பலியா‌‌யின‌ர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த 9 தொழிலாளர்கள் நாமக்கல் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.

இந்த நிலையில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த உ மேஷ்குமார் என்ற தொழிலாளி நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இன்று காலையில் ஓம்பிரகாஷ் என்ற வா‌லிப‌ர் இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil